எனது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டதால், எனக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைக்கின்றது , நான் என்னென்ன ஸ்லோகங்களைச் சொல்ல முடியும்? மேலும், பெண்கள் வீட்டில் ஸ்ரீமத் இராமாயணம் மூலம், படிக்கலாமா என்று தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கின்றேன்.

தேசிக ஸ்தோத்ரங்கள், பூர்வாசார்ய ஸ்தோத்ரங்கள், ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தம் , தேசிகப்ரபந்தம் என ரசமான விஷயங்கள் நாம் தெரிந்துக்கொள்ள நிறைய இருக்கின்றது.
அதே வரிசையில், எத்தனையோ புத்தகங்கள், ஸ்ரீ ந்ருஸிம்ம ப்ரியா, ஸ்ரீ ரங்கநாத பாதுகா என இவ்விதழ்களில் நல்ல ஸ்வாரஸ்யமான, பல கட்டுரைகள் வந்துக்கொண்டிருக்கிறது.
இவை தவிர புராணக்கதைகள் ஸ்ரீமத் இராமாயணம், மகாபாரதம் எனத் தமிழ், ஆங்கிலம் என்று பல மொழிகளில் புத்தகங்கள் கிடைக்கின்றது.
இத்தனை சாமக்ரியைகள் நிரம்பி இருக்கின்றபடியால், இதைச்சேவிக்க நல்ல படியாக நம் வாழ்க்கை கழியும். மேலும், உபன்யாசங்களும் பல கேட்கலாம்.
ஆனால், ஸ்ரீமத் இராமாயணம் மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதை மூலத்தை ஸ்த்ரீகள் சேவிக்க சாஸ்த்ரம் அனுமதிக்கவில்லை. அர்த்தங்களைப் படித்து கட்டாயமாகத் தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top