விசிஷ்டம் என்றால் கூடியது, சேர்ந்தது என்று அர்த்தம். அத்வைதம் என்றால் ஒன்று என்று அர்த்தம்.
சகல ப்ரபஞ்சத்தோடும் சகல ஜீவர்களோடும் கூடிய பரமாத்மா நாராயணன் ஒருவனே என்பதே விசிஷ்டாத்வைதத்தின் பொருள்.
பெருமாள் தனியாகவும், ப்ரபஞ்சம் தனியாகவும் இருக்கின்றது என்று அர்த்தம் கிடையாது.
எல்லாப்பொருட்களிலும், எல்லா ஜீவன்களிலும் பெருமாள் இருக்கின்றார். பெருமாள் விசிஷ்டமாக இருக்கின்றார். பெருமாளைத் தனித்து எந்த வஸ்துவும் இருக்கவே முடியாது. அப்படி விசிஷ்டமாக சேர்த்துவைத்து பார்த்தோமேயானால் எல்லாவற்றோடும் சேர்ந்திருக்கக்கூடிய பரமாத்மா ஒருவனே.
லௌகீக உதாஹரணத்திற்கு ஒரு மரத்தை எடுத்துக்கொண்டால் மரத்தில் இலை, பூ, காய், பழம் இருக்கும் . இதைத்தவிர மரத்தின் குணங்களான வாசனை, ரஸம் , பல த்ரவ்யங்கள், எல்லாம் கலந்திருக்கும். இவை அனைத்தையும் சேர்த்தே ஒரு மரம் என்கின்றோம். அதேபோல் சகல சேதனாசேதன ப்ரபஞ்சங்கள் எல்லாவற்றுடனும் சேர்ந்த பரமாத்மா ஸ்ரீமன் நாராயணன் ஒருவன் என்பது தான் விசிஷ்ட அத்வைதம் .
இதைப்பற்றி விஸ்தாரமாக காலக்ஷேபங்களில் கேட்கலாம் அல்லது க்ரந்தங்களில் பார்க்கலாம்.

