அடியேனுக்கு சமீபத்தில் ஸமாஶ்ரயணம் கிடைத்தது. அதற்கு முன்னர் நான் தென்கலை ஸம்ப்ரதாய தனியன்களையும், உபதேச ரத்தினமாலை போன்ற க்ரந்தங்களையும் புத்தகம் மற்றும் ஒலி மூலம் கேட்டு சேவித்து வந்தேன். 1. தற்சமயம் வடகலை ஸம்ப்ரதாய ஸமாஶ்ரயணம் கிடைத்த பின்னர் உபதேச ரத்தினமாலையைச் சேவிக்கலாமா? 2. அது வழக்கமில்லை என்றால் வடகலை ஸம்ப்ரதாய குருபரம்பரையைப் பின்பற்ற தமிழில் உள்ள க்ரந்தங்களை அடியேனுக்கு தெரிவிக்க வேணுமாய் விண்ணப்பிக்கிறேன்.

உபதேச ரத்தினமாலை போன்ற க்ரந்தங்களை புத்தகம் மற்றும் ஒலி மூலம் கேட்டு நன்றாக சேவிக்கலாம் . அதில் ஆசாரியர்களைப்பற்றி இருப்பதினால் அதைச் சேவிப்பதில் ஒன்றும் தோஷம் கிடையாது.
வடகலை ஸம்ப்ரதாய க்ரந்தங்கள் என்று எடுத்துக்கொண்டால் தேஶிக ஸ்தோத்ரங்கள், தேஶிக ப்ரபந்தம் குறிப்பாக ப்ரபந்த ஸாரம், பிள்ளையந்தாதி ,தேஶிக மங்களம் போன்றவற்றைச் சேவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top