“மஹாலக்ஷ்மியின் அழகான திருமார்பில் பூசப்பட்டிருக்கும் குங்குமக் குழம்பிலிருந்து அவர் தனது திருமார்பை விடுவித்துக் கொண்டார்” என்பதிற்கான தாத்பர்யம் என்னவென்றால் ப்ராட்டியுடன் பெருமாள் ஏகாந்தத்தில் இருக்கும்பொழுதுகூட கஜேந்திரன் ஆதிமூலமே என்று கூக்குரல் இட்டவுடன் எல்லாவற்றையும் மறந்து பக்தர்களை ரக்ஷிப்பதே ப்ரதானமாக கொண்டு, மற்றது எதுவானாலும் அது அப்ரதானம் என்பதை காண்பிப்பதற்கு ரஸமாகச் சொல்லப்பட்ட வார்த்தையாகும்.
ப்ராட்டியுடன் பெருமாள் ஆலிங்கனத்தில் இருக்கும்பொழுதுகூட அதை பட்டென்று உதறிதள்ளிவிட்டு கஜேந்திரனை ரக்ஷிப்பதற்காக உடனே போனார் என்பதாக, அதாவது ரஸமான வார்த்தை என்கின்ற ரீதியில் அந்த அர்த்தத்தை எடுத்துகொள்ள வேண்டும்.