www.sadagopan.org இன் e- புத்தகங்களில் ஒன்றான ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தின் உத்திர ஶதகத்தில் உள்ள ஸ்லோகம் 56க்கான தமிழ் மற்றும் ஆங்கில வியாக்கியானம் / விளக்கம குழப்பமாக உள்ளது. கீழ் வரும் ஸ்லோகத்தின் இரண்டாம் பாதியில் देवीहस्ताम्भुजेभ्यश्चरअणकिसलये समवहद्भयोऽपहृत्य प्रत्यस्यानन्तभोगं झटिति जलपुटे चक्षुषी विस्तृणानः। “अक्षिप्योरश्च लक्षम्याः स्तनकलशकनत्कुङ्कुमस्तोमपङ्कात् देवः श्रीरङ्गधामा गजपतिघुषिते व्याकुलः स्तात् पुरो नः”॥ அதில் “மஹாலக்ஷ்மியின் அழகான திருமார்பில் பூசப்பட்டிருக்கும் குங்குமக் குழம்பிலிருந்து அவர் தனது திருமார்பை விடுவித்துக் கொண்டார்” என்று விளக்கம் இருக்கின்றது. தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

“மஹாலக்ஷ்மியின் அழகான திருமார்பில் பூசப்பட்டிருக்கும் குங்குமக் குழம்பிலிருந்து அவர் தனது திருமார்பை விடுவித்துக் கொண்டார்” என்பதிற்கான தாத்பர்யம் என்னவென்றால் ப்ராட்டியுடன் பெருமாள் ஏகாந்தத்தில் இருக்கும்பொழுதுகூட கஜேந்திரன் ஆதிமூலமே என்று கூக்குரல் இட்டவுடன் எல்லாவற்றையும் மறந்து பக்தர்களை ரக்ஷிப்பதே ப்ரதானமாக கொண்டு, மற்றது எதுவானாலும் அது அப்ரதானம் என்பதை காண்பிப்பதற்கு ரஸமாகச் சொல்லப்பட்ட வார்த்தையாகும்.
ப்ராட்டியுடன் பெருமாள் ஆலிங்கனத்தில் இருக்கும்பொழுதுகூட அதை பட்டென்று உதறிதள்ளிவிட்டு கஜேந்திரனை ரக்ஷிப்பதற்காக உடனே போனார் என்பதாக, அதாவது ரஸமான வார்த்தை என்கின்ற ரீதியில் அந்த அர்த்தத்தை எடுத்துகொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top