சுக்லாம் பரதரம் என்பது கணபதியைப்பற்றி என்று ஸ்மார்த்தர்கள் சொல்கின்றனர். விஷ்வக்ஸேனருடைய பரிவாரத்தில் ஒருவர் கஜ முகத்துடன் இருக்கின்றார். கஜானன் என்றே அவருக்கு பெயர். அதனால் அவரை சொல்கிறது என்று சில பேர் சொல்வார்கள்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்பதினால் சாக்ஷாத் எம்பெருமான் விஷ்ணுவைப் பற்றியே சொல்கின்றது என்று நாம் அனைத்து கர்மத்திலும், அனுஷ்டானத்திலும் இதைச் சொல்லி ஆரம்பிக்கின்றோம்.