பகவத் இராமானுஜர் ஆளவந்தாருடைய தௌஹித்ரன் ஆகவேண்டும். அதாவது பெண் வயிற்று பிள்ளையாக இருக்க வேண்டும். முதலாவதாக ஆளவந்தார் ஒரு ஸந்யாசியாதலால் அவருக்கு அவருடைய வம்சத்தைப் பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம். இரண்டாவதாக முற்காலத்தில் பெண் வயிற்றுச் சந்ததிகளுக்கு இப்பொழுது நமக்கு இருப்பது போல் நெருக்கமோ, பழக்கமோ,பரிச்சயமோ இருப்பது கொஞ்சம் கடினமான விஷயம்.நமக்கு இப்பொழுது எல்லா வசதிகளும் உண்டு. பெண்ணைத்திருமணம் செய்துகொடுத்த பின் அவர்களை போய் பார்க்கலாம், அவர்களுடன் தொலைபேசியில் உரையாடலாம். மேலும் பகவத் இராமானுஜர் குருகுலத்தில் இருந்து கொண்டு வித்யாப்யாஸம் பண்ணிக்கொண்டு இருந்தார். இது போல் பல காரணங்கள் இருந்ததாக பெரியோர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.