ஸ்த்ரீகள் பெருமாள் பெட்டியைத் திறந்து தளிகை ஸமர்பிப்பது என்பது வழக்கத்திலில்லை.
பெருமாள் பெட்டி மரத்தில் இருக்கும், பெருமாள் தான் உள்ளே ஏளியிருக்கிறார், பெருமாளைத் தொடவில்லை என்று இருக்கு அதனால் என்ன தோஷம் வரும் என்று தெரியவில்லை. பெருமாள் ஏளியிருக்கும் பெட்டிக்கு கோவிலாழ்வார் எனும்படியால், அவருக்கே விசேஷமாக ஸந்நிதி முதலானவை இருக்கின்றபடியால் திறந்து ஸமர்பிப்பதை வழக்கத்தில் வைத்துக்கொள்ளவில்லை.