a.க்ரஹண சம்யத்தில் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்யலாம்.
b.பரந்யாஸம் பண்ணிக்கொண்டவர்கள் தனியாக க்ரஹண காலத்தில் சாந்தி பரிகாரம் செய்கிற வழக்கம் கிடையாது, அந்தக் காலத்தில் அகத்துப் பெருமாள் சந்நிதியிலோ கோவில்களிலேயோ விளக்கேற்றுவார்கள். ப்ரதக்ஷிணம், ஸ்தோத்ரம் சேவிப்பது, ஜபங்கள் முதலானவைகள் செய்யலாம். மற்றபடி சங்கல்ப ரூபமாக சாந்தி பரிகாரம் செய்யவேண்டிய அவசியமில்லை.
c.மஹாளய பக்ஷத்தில் தினமும் தர்ப்பணம் செய்பவர்கள் கூட அந்தக் குதப காலத்தில் செய்வதுதான் சரியாக இருக்கும்.

