ஶரணாகதிக்கு முன்னானாலும் பின்னானாலும் சரி திருவாராதனம் தினமும் செய்யவேண்டிய கைங்கர்யம். ஆகையால் திருவாராதனம் என்பது நித்ய கைங்கர்யம் என்று ஸ்ம்ருதிகளிலும் ஆகமங்களிலும் சொல்லியிருக்கிறார்கள். எனவே முடிந்தவரை தினமும் திருவாராதனம் செய்வது நல்லது.
உங்களால் முடியாவிட்டால் உங்கள் அகத்திலிருக்கும் பெரியவர்களையோ, சிறியவர்களையோ, புத்திரன் முதலியவர்களைக் கொண்டு செய்யலாம்.

