அல்ப த்வாதசி நாட்களில் ஸந்தியாவந்தனம்,ப்ரம்ம யஜ்ஞம்,மாத்யாஹ்நிகம், திருவாராதனம், வைஶ்வதேவம் என எல்லாவற்றையும் முடித்துவிட்டுப் பாரணை பண்ணவேண்டும். அதில் மாத்யாஹ்நிகம் முதலியவற்றை சூர்யோதயத்திற்கு முன்னமே செய்திருந்தால் மத்யாஹ்னத்தில் மீண்டும் செய்யவேண்டும். சூர்யோதயத்திற்குப் பின்னர் மாத்யாஹ்நிகம், ப்ரம்ம யஜ்ஞம், திருவாராதனம் முதலியவைகளைச் செய்திருந்தால் மீண்டும் செய்யத்தேவையில்லை.
இதைப் பற்றி விரிவாக ஶ்ரீமதழகியசிங்கர் ஆஹ்நிக க்ரந்தத்தில் ஸாதித்திருக்கிறார்.

