a.எல்லாத் திருமேனிகளும் ஒன்றுதான் என்றாலும்கூட, ஆகமங்களிலே ஒவ்வொரு திருமேனிகளும் ஒவ்வொரு விசேஷ பலனைத் தரும் என்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். பெருமாள் நமக்கு விசேஷ பலனைத் தருவதற்காக அந்தந்தத் திருமேனியுடன் காத்துக்கொண்டிருக்கிறார். அதை த்யானம் பண்ணால் அந்தப் பலன் கிடைக்கும். பலவிதமாக அனுக்ரஹம் செய்யக்கூடிய பெருமாள் நமக்கு விசேஷ அனுக்ரஹம் செய்வதற்காக பல திருமேனிகளை எடுத்துக்கொண்டு நமக்கு அனுக்ரஹம் செய்வதற்காக காத்துக்கொண்டிருக்கிறான் என்று ஆகமங்களிலே சொல்லியிருக்கிறார்கள். ஆகையால் ஆபத்துக்காலத்தில் நம்மை காப்பதற்காகவே ஶ்ரீ ந்ருஸிம்ஹபெருமாள் காத்துக்கொண்டிருக்கிறான்.நமக்கெல்லாம் இப்படிச்சொன்னால் ஒரு ஶ்ரத்தை வரும் என்பதற்காக பல திருமேனிகளோடு பெருமாள் இருக்கிறான்.
b.பஞ்சமுக ஆஞ்சநேயரைச் சேவிக்கும் வழக்கமுண்டு. சேவிக்கலாம்.

