a.ஸ்ரீமன் நாராயணனின் எல்லா அர்ச்சா விக்ரஹங்களும் (திருமேனிகள்) ஒன்றே என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இருப்பினும், பல நேரங்களில் ஒரு குறிப்பிட்ட பலனை விரைவில் பெறுவதற்காகப் பெருமாளின் ஒரு குறிப்பிட்ட வடிவத்தையோ அல்லது அவருடைய நித்யஸூரிகளையோ (உதாரணமாக ஆஞ்சநேயர்) வழிபடச் சொல்லப்படுகிறோம். உதாரணமாக, ஆபத்து காலங்களில் ஸ்ரீ நரஸிம்ஹரையோ, ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியையோ அல்லது ஸ்ரீ சக்ரத்தாழ்வாரையோ வழிபட அறிவுறுத்துகிறார்கள். இது ஏன்? ஒரு பக்தன் ஸ்ரீ கிருஷ்ணனை வழிபடுவதை விட, ஸ்ரீ ஆஞ்சநேயரிடமோ அல்லது ஸ்ரீ நரஸிம்ஹரிடமோ பிரார்த்தனை செய்தால் பலன் விரைவில் கிடைக்குமா? b. ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரைப் பற்றிய தகவல்களை வழங்க முடியுமா? நம்முடைய ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடும் வழக்கம் உள்ளதா?

a.எல்லாத் திருமேனிகளும் ஒன்றுதான் என்றாலும்கூட, ஆகமங்களிலே ஒவ்வொரு திருமேனிகளும் ஒவ்வொரு விசேஷ பலனைத் தரும் என்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். பெருமாள் நமக்கு விசேஷ பலனைத் தருவதற்காக அந்தந்தத் திருமேனியுடன் காத்துக்கொண்டிருக்கிறார். அதை த்யானம் பண்ணால் அந்தப் பலன் கிடைக்கும். பலவிதமாக அனுக்ரஹம் செய்யக்கூடிய பெருமாள் நமக்கு விசேஷ அனுக்ரஹம் செய்வதற்காக பல திருமேனிகளை எடுத்துக்கொண்டு நமக்கு அனுக்ரஹம் செய்வதற்காக காத்துக்கொண்டிருக்கிறான் என்று ஆகமங்களிலே சொல்லியிருக்கிறார்கள். ஆகையால் ஆபத்துக்காலத்தில் நம்மை காப்பதற்காகவே ஶ்ரீ ந்ருஸிம்ஹபெருமாள் காத்துக்கொண்டிருக்கிறான்.நமக்கெல்லாம் இப்படிச்சொன்னால் ஒரு ஶ்ரத்தை வரும் என்பதற்காக பல திருமேனிகளோடு பெருமாள் இருக்கிறான்.
b.பஞ்சமுக ஆஞ்சநேயரைச் சேவிக்கும் வழக்கமுண்டு. சேவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top