ஒரு மாசத்தில் இரண்டு முறை நக்ஷத்திரம் வந்தால் இராண்டாவது முறை வரும் நக்ஷத்திரத்தைதான் ஜன்ம நக்ஷத்திரமாகக் கொண்டாடவேண்டும் என்பதாக ஶாஸ்திரம் சொல்லியிருக்கிறது. ஜன்ம நக்ஷத்திரம், ஶ்ரார்த்த திதி போன்றவற்றிற்கு ஶாஸ்திரம் சொல்லுவதைதான் நாம் ப்ரமாணமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஜன்ம நக்ஷத்திரம் என்பது அன்றைய தினத்து சூர்யோதயத்திலிருந்து 12 நாழிகை இருக்கவேண்டும். அப்படியில்லையென்றால் அதற்கு முதல்நாள் கொண்டாடவேண்டும்.
உதா: புதன் அன்று ரேவதி நக்ஷத்திரம் சூர்யோதயத்திலிருந்து 12 நாழிகை இருந்ததென்றால், புதன் கிழமை ரேவதி ஜன்ம நக்ஷத்திர தினமாகும். ஒருவேளை 111/2 நாழிகை இருந்தால் முதல்நாளே, அதாவது செவ்வாக்கிழமையே ஜன்ம நக்ஷத்திரம் கொண்டாட வேண்டும்.

