12 வயதிற்கு மேல் ஶாஸ்த்ர அத்யயனத்திற்கு அனுப்பலாமா என்றால், தாராளமாக எவ்வித சந்தேகமின்றி அனுப்பலாம்.
நீங்கள் யதா க்ரமம் உபநயன ஸம்ஸ்காரம் ஆனபின் கேளுங்கள், நம் ஸம்ப்ரதாய முறைப்படி கற்க நல்ல பாடசாலைகள், நல்ல ஶாஸ்த்ர பரிக்ஷைகள் எல்லாம் இருக்கிறது. தெனாளி பரிக்ஷைக்கு அனுப்ப திருப்பதி முதலான ஊர்களில் இருக்கிறார்கள். ஆகையால் நீங்கள் துணிந்து தாராளமாக அவர்களை ஸம்ப்ரதாய முறைப்படி கற்க அனுப்பலாம்.