எங்களுக்கு இரண்டு புத்திரர்கள் இருக்கிறார்கள்.இருவரையும் உபநயன ஸம்ஸ்காரம் ஆனபின் வேத அத்யயனத்தில் சேர்க்க ஆசைகொண்டுள்ளோம். 12 வயதுக்கு மேல் இருவரின் ஒருவரை ஶாஸ்த்ர அத்யயனத்திற்கு அனுப்பலாமா? (ஆதாவது ந்யாயம், தர்க்கம், வ்யாகரணம் போன்ற ஶாஸ்த்ரங்கள் வாசிக்க) நம் ஸம்ப்ரதாய முறைப்படி இவையெல்லாம் கற்க எங்கு சேர்க்கவேண்டும? மேலும் யாரேனும் தெனாலி மஹாபரிக்ஷைக்குக் குழந்தைகளைத் தயார் செய்து அனுப்புகிறார்களா? யாரை அணுக வேண்டும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன். எங்களுக்குப் புத்திரர்களை ஸம்ப்ரதாயம் கற்க அனுபிக்கவேண்டும் என்றும், NIOS முறையில் அவர்களை Secondary and Senior Secondary பரிக்ஷைகளுக்கு அனுப்பவும் ஆசைப்படுகிறோம். எங்களின் எண்ணம் சரியானதா?

12 வயதிற்கு மேல் ஶாஸ்த்ர அத்யயனத்திற்கு அனுப்பலாமா என்றால், தாராளமாக எவ்வித சந்தேகமின்றி அனுப்பலாம்.
நீங்கள் யதா க்ரமம் உபநயன ஸம்ஸ்காரம் ஆனபின் கேளுங்கள், நம் ஸம்ப்ரதாய முறைப்படி கற்க நல்ல பாடசாலைகள், நல்ல ஶாஸ்த்ர பரிக்ஷைகள் எல்லாம் இருக்கிறது. தெனாளி பரிக்ஷைக்கு அனுப்ப திருப்பதி முதலான ஊர்களில் இருக்கிறார்கள். ஆகையால் நீங்கள் துணிந்து தாராளமாக அவர்களை ஸம்ப்ரதாய முறைப்படி கற்க அனுப்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top