எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்காமல் எதையும் உட்கொள்ளக்கூடாது. ஊறுகாய் முதலியவைகளை மொத்தமாகப் பண்ண அன்றைக்கே ப்ரசாதத்துடன் பெருமாளுக்கு ஸமர்ப்பித்து விடுவார்கள். அதேபோல் அப்பளம் போன்றவற்றை, அப்பள மாவு செய்தவுடனேயே இரண்டு மூன்று உருண்டைகளை எடுத்து வைத்துவிட்டு முதல்நாளே எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்து விடுவார்கள்.
மேலும் அப்பளமே அன்றன்றைக்கு பண்ணி அப்படியே ஸமர்ப்பிக்கலாம் என்றும் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அப்பளத்திற்கு தோஷமில்லை. மேலும் புதிதாக அப்பளம் எடுத்து அன்றைக்குப் பொரித்த அப்பளமும் விசேஷ நாட்களில் ஸமர்ப்பிப்பது உண்டு பெரியவர்களின் வழக்கத்திலும் உண்டு.