12 திருமண்காப்பு இட்டபின் மீதி கையில் இருந்தால் அதை தலையில் இட்டுக்கொள்ளவேண்டும் என்று ஸ்வாமி சாதித்திருக்கிறார். அதையும் சேர்த்து 13 என்று சொல்கிறார்களே தவிர தனிப்பட்டதாக ஒன்று என்பதில்லை. அதனால் இவை இரண்டிற்கும் விரோதமில்லை.
மேலும் 12க்கு மேல் கையில் மீதியிருக்கும் திருமண்காப்பை அலம்பக்கூடாது, அதை தலையில் தரிக்க வேண்டும். திருமண் ஸ்ரீசூர்ணம் இரண்டையும் கைஅலம்பி கீழே தள்ளக்கூடாது. தலையில் தரிக்க மந்திரமும் இருக்கிறது.