1. வாழைப்பழத்தைத் தோலுரிக்காமலேயே ஸமர்ப்பிப்பது ந்யாயமாக இருக்காது. பொதுவாகவே நாம் எப்படிச் சாப்பிடுகிறோமோ அப்படி ஸமர்ப்பிப்பதுதான் நல்லது. முழு தோலையும் உரிக்கவில்லையென்றால் சிலர் அதன் தோலை லேசாக உரித்துவிட்டு ஸமர்ப்பிப்பார்கள். கோயில் முதலான இடங்களில் மொத்தமாக எல்லா பழங்களின் தோலை உரிப்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கும். பக்தர்களும் அதை விரும்ப மாட்டார்கள், முழுத் தோலை உரித்த வாழைப்பழத்தை எடுத்துச் செல்வதில் சில கஷ்டங்கள் இருக்கிறது. அதனால் அப்படியே கண்டருளப்பண்ணுவார்கள் எம்பெருமான் ஏற்றுக்கொள்வான் என்கிற ரீதியில். க்ருஹங்களில் பண்ணும்போது முழுத்தோலையும் உரித்து ஸமர்ப்பிப்பதுதான் நல்லது. நிறைய பழங்கள் இருக்கும் பக்ஷத்தில் உசித்தமானதைச் செய்யவும், 12 பழங்கள் இருந்தால் முழுவதையும் அவ்வாறு செய்து ஈ போன்றவை மொய்க்க வாய்ப்பிருக்கிறது அதனால் பார்த்து உசிதமானதைச் செய்யவும்.
2. அகத்திற்கு வருவோருக்கு பெருமாளுக்கு ஸமர்ப்பித்த பழத்தைத் தாம்பூலத்தில் வைத்து தாராளமாகக் கொடுக்கலாம்.