காயத்ரி ஜபத்திற்கு வேறொரு நாள் சொல்லவில்லை. ஆகையால் என்று காயத்ரி ஜபமோ அன்றைக்குதான் பண்ணி ஆக வேண்டும், வேற வழி கிடையாது. ப்ரயாணத்தை அதற்கு தகுந்தாற்போல் முன்னையோ அல்லது பின்னையோ மாற்றிக்கொண்டு கார்த்தாலே ஜபம் பண்ணிவிட்டு போவதோ இல்லையென்றால் நாம் ப்ரயாணத்தில் போகின்ற இடத்தில் எங்கேயாவது உட்கார்ந்து கொண்டு ஜபம் பண்ணுவதோ, இப்படி ஏதாவது ஒரு வழி பண்ணிக் கொண்டால் நல்லது. இதற்கு என்று இன்னொரு நாள் சொல்லப்படவில்லை.