பண்டிகை நாட்களில் ஏகாதசி விரதம் வந்தால், க்ருஹத்தில் பெருமாளுக்கு அன்னம் ஸமர்ப்பித்து அதற்கு உபயோகம் இல்லை என்னும் பொழுது பழங்களை ஸமர்ப்பிக்கலாம். “
பத்ரம், புஷ்பம் ப2லம் தோயம்” (पत्रं पुष्पं फलं तोयं) என்று பெருமாளே சொல்லியிருப்பது போல் பழங்களை ஸமர்ப்பிக்கலாம்.
பண்டிகை நாட்களில் ஏகாதசி உபவாசம் இருந்தோமானால் வேறு அன்னம் ஸமர்பிப்பதற்கு உபயோகங்கள் இல்லையென்றால் பழங்கள் ஸமர்ப்பிக்கலாம். அனால் விசேஷமான பண்டிகை நாட்களில் விசேஷமாகப் பண்ணியாக வேண்டும். உதாஹரணமாக ஸ்ரீஜெயந்தி எடுத்துக் கொண்டால், அன்று உபவாசம் இருக்கக் கூடியவர்கள் , நமக்கு உபவாசமாயிற்றே என்று பெருமாளுக்கு ஒன்றும் பண்ணாமல் இருக்க முடியாது. ஸமர்ப்பித்துதான் ஆக வேண்டும். அதனால் அந்தப் பண்டிகைக்கான பக்ஷியாதிகளை ஸமர்ப்பித்து விட்டு அதற்கு மறுநாள் உபயோகப் படுத்துவது போன்று ஏதாவது பண்ணலாம். இல்லை வேறேதற்காவது உபயோகம் பண்ண முடியும் என்றாலும் பண்ணலாம்.
ஸர்வாத்மமாக முடியவில்லை. விட்டு போய்டுத்து என்று சொன்னால் அதற்குப் பிறகு கேட்கவும். அப்பொழுது என்ன பண்ண வேண்டும் என்று சொல்கிறோம். வேறு ப்ராயஶ்சித்தம் எதுவும் தனியாகச் சொல்லவில்லை. அதனால் அது விட்டு போய்விடும். அதற்கு வேறு நாள் கிடையாது. அதனால் காயத்ரி ஜபம் அன்றேதான் பண்ண வேண்டும்.