பாதுகா தீர்த்தம் ஸ்வீகரிப்பது பஞ்சகவ்யம் ஸ்வீகரிப்பதற்குச் சமம் என்று கேள்விப்பட்டுள்ளேன். இதை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

பாதுகா தீர்த்தம் ஸ்வீகரிப்பது பஞ்சகவ்யம் ஸ்வீகரிப்பதற்கு சமானம். பஞ்சகவ்யம் என்ன என்று கேட்டால் அது ப்ராயஶ்சித்தம். நாம் கண்டதைச் சாப்பிட்டு விட்டால் அதற்கு ப்ராயஶ்சித்தம். அதேபோல் ஸ்ரீ பாத தீர்த்தம் பாதுகாத் தீர்த்தமும் ப்ராயஶ்சித்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. பஞ்சகவ்யத்திற்கு ஒரு சுலோகம் இருப்பது போல் பாதுகா தீர்த்தம் ப்ராயஶ்சித்தமாக ஸ்வீகரிப்பதற்கு ஒரு ஸ்லோகம் இருக்கின்றது. சங்கல்பம் எல்லாம் பண்ணிக்கொண்டு நான் இதற்குப் ப்ராயஶ்சித்தமாக இந்த ஸ்ரீபாத தீர்த்தத்தைச் சேர்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி அந்தப் ஸ்ரீபாத தீர்த்தத்தை ஸ்வீகரித்தோமேயானால் அது ப்ராயஶ்சித்தமாகும். அதனால் அந்த அசுத்தி போய் சுத்தி வரும் என்று உண்டு. இது பெரியோர்கள் வழக்கத்திலும் உண்டு. ஸ்ரீபாத தீர்த்தம் ஸ்வீகரிப்பதற்கான ஶ்லோகத்தைப் பெரியோர்களிடம் உபதேசமாகப் பெற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top