சஷ்டியப்தபூர்த்தி 60 முடிந்து 61 ஆரம்பிக்கும் பொழுது விசேஷமாக கொண்டாட வேண்டும் என்று இருக்கின்றது. பொதுவாகவே எல்லா ஜன்ம தினமுமே விஷேசம் தான். அதனால் அந்த ரீதியில் அறுபதாவது திருநக்ஷத்திரத்தன்று கோவிலுக்கு சென்று பெருமாள் சேவித்து அர்ச்சனாதிகள் எல்லாம் செய்து, பெருமாளுக்கு விசேஷ திருவாராதனங்கள் எல்லாம் செய்து, நான்கு பெரியவர்களை அழைத்து ததீயாராதனம் பண்ணலாம். முடிந்தால் ஸ்ரீமத் ராமாயணம் எல்லாம் சேவிக்கலாம். 61 ஆகும்பொழுது சஷ்டியப்த பூர்த்தி , தமிழ் வருடம் அதே வருடமே வரும். அப்பொழுது திருமாங்கல்ய தாரணம் முதலானவைகளைச் செய்யலாம் என்று இருக்கின்றது.