அடியேனுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டது, ஆனால் என் அகத்துகாரருக்கு இன்னும் ஆகவில்லை, முக்கூர் அழகியசிங்கரிடம் ஸமாஶ்ரயணம் மட்டுமே ப்ராப்தம் ஆகியுள்ளது, அவருக்கு 60வது திருநக்ஷத்திரம் அடுத்த ஆண்டு சித்திரை மாதத்தில் வருகிறது. அந்தத் தினத்தில், அல்லது அந்த வாரத்தில், சாஸ்திர ரீதியாக சொல்லப்பட்டுள்ளவை மட்டுமே செய்ய வேண்டும் என்றால், அதுவும் பெருமாள் கைங்கர்யமாக செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக விவரிக்க விண்ணப்பிக்கிறேன்.

சஷ்டியப்தபூர்த்தி 60 முடிந்து 61 ஆரம்பிக்கும் பொழுது விசேஷமாக கொண்டாட வேண்டும் என்று இருக்கின்றது. பொதுவாகவே எல்லா ஜன்ம தினமுமே விஷேசம் தான். அதனால் அந்த ரீதியில் அறுபதாவது திருநக்ஷத்திரத்தன்று கோவிலுக்கு சென்று பெருமாள் சேவித்து அர்ச்சனாதிகள் எல்லாம் செய்து, பெருமாளுக்கு விசேஷ திருவாராதனங்கள் எல்லாம் செய்து, நான்கு பெரியவர்களை அழைத்து ததீயாராதனம் பண்ணலாம். முடிந்தால் ஸ்ரீமத் ராமாயணம் எல்லாம் சேவிக்கலாம். 61 ஆகும்பொழுது சஷ்டியப்த பூர்த்தி , தமிழ் வருடம் அதே வருடமே வரும். அப்பொழுது திருமாங்கல்ய தாரணம் முதலானவைகளைச் செய்யலாம் என்று இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top