அனுஷ்டானத்திற்கு உபயோகிக்கும் சொம்பு, குளபாத்திரம் (குளவாத்திரம்) முதலியவை எந்த உலோகத்தில் (material)இருக்கவேண்டும்? எதனால் ஆனது உத்தமம் என்றும் எதனால் ஆனது சர்வதா கூடாது என்றும் ஏதேனும் விதி இருக்கிறதா?

பொதுவாக இரும்பு, எவர்சில்வர்(இரும்பு கலந்திருப்பதால்) போன்றவற்றில் இருக்கக்கூடாது. மற்றபடி வெள்ளி, செம்பு, பித்தளை போன்றவற்றில் இருக்கலாம் பெரியவர்களும் உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் உத்தமம், இது மத்யமம் என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எது இருக்கிறதோ அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் செம்பு பாத்திரங்களெல்லாம் அந்த ஜலமானது விஞ்ஞான ரீதியாக நல்லது என்று சொல்லுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top