அடியேன் ஜபம் பண்ணும்போது வெளிச்சிந்தனைகள் வருகிறதே தடுப்பதற்கு உபாயம் உள்ளதா?

இதற்காகதான் த்யான ஶ்லோகம் என்று வைத்திருக்கிறார்கள். ஜபம் பண்ணும் முன் த்யான ஶ்லோகம் என்று ஒன்றிருக்கும். அதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அதில் அந்த மூர்த்தியின் ரூபத்தைச் சொல்லி அவரை எப்படி த்யானம் பண்ணவேண்டும் என்பதிருக்கும். அப்படியாக அந்த மூர்த்தியை த்யானித்து ஜபம் பண்ணவேண்டியது.
ஜபம் பாண்ணும்போது நமக்கு பகவன் ரூபத்தை த்யானம் பண்ணாதபோதுதான் வெளிச்சிந்தனைகள் வருகிறது. முடிந்தளவு இப்படி ஒரு மூர்த்தியை த்யானம் பண்ண நாம் கற்றுக்கொண்டால் நமக்கு வெளிச்சிந்தனை வருவது குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top