ஒருமுறை உடுத்திக் களைந்த வஸ்திரத்தை துவைத்துவிட்டுதான் அடுத்தமுறை உபயோகப்படுத்த வேண்டுமா? உதா காலையில் அனுஷ்டானங்களை முடித்துவிட்டு அலுவலகத்திற்குச் செல்லும் முன் வேறு வஸ்த்திரம் மாற்றி, சாயங்காலம் அனுஷ்டானத்திற்கு காலை உடுத்திய அதே வஸ்திரத்தை உபயோகிக்கலாமா?

காலையில் உடுத்திய வஸ்திரத்தை மாலை உடுத்தலாம் என்பதில் பெரிய தோஷமில்லை என்று தோன்றினாலும் அது இரண்டாம் பக்ஷம்தான். விழுத்து போட்டுவிட்டால் அது மறுநாளைக்கு விழுப்பாகிவிடுகிறது. சிறிய குழந்தைகள் என்றால் பரவாயில்லை ஆனால் பெரியவர்கள் அனுஷ்டானம் என்று வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அனுஷ்டானம் சமயம் களைந்த வஸ்த்ரத்தை மீண்டும் உடுத்திக்கொள்ளும்போது ஒரு சிறிய குறை வருகிறது அதனால் முடிந்தால் வேறு வஸ்திரத்தை உடுத்திக்கொண்டு செய்வது சிறப்பானது. மற்றபடி விழுப்பு, தீட்டு அல்லது அதைத் தொடக்கூடாது என்றெல்லாம் கிடையாது. அதே மறுநாள் ஆகிவிட்டால் அந்த வஸ்திரம் விழுப்பாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top