சாதாரணமாக புழக்கத்தில் நாம் கருடாழ்வார் ஸந்நிதி என்று சொல்வதுண்டு. பழவேரி ஸ்ரீ.உ.வே.லஷ்மி நரஸிம்ஹாசார்யார் (பாலாஜி) ஸ்வாமி உபன்யாசத்தில் நம் சம்ப்ரதாயத்தில் கருடாழ்வார் என்று சொல்வதில்லை, பெரிய திருவடி என்று சொல்கிறோம் என்று கூறக்கேட்டேன். இதற்கு ஏதேனும் காரணங்கள் உண்டா? சற்று விளக்கவும். அப்படியானால் நாம் கருடாழ்வார் என்று சொல்வது தவறா?

நம் ஆசார்யர்களுடைய வ்யாக்யான க்ரந்தங்களிலே ஆழ்வார்கள் என்று குறிப்பிட்டால் ஸ்ரீ சக்ரத்தாழ்வாரும், ஸ்ரீ பாஞ்சசன்யமான சங்கத்தாழ்வாரும் என்று அர்த்தம்.
அனுமனுக்குத் திருவடி என்றும், கருத்மானுக்குப் பெரியதிருவடி என்று ஸ்ரீகோசங்களிலே ஆசார்யர்களுடைய வ்யவகாரம். அதை வைத்துதான் ஸ்ரீ உ வே பாலாஜி ஸ்வாமி ஸாதித்திருக்கிறார்.
நாம் கருடாழ்வார் என்று சொல்வதில் விரோதமில்லை, சொல்லலாம். ஆனால் பெரியதிருவடி என்று ஆசார்யர்களுடைய வ்யவகாரம் என்பது ஸ்ரீகோசங்களிலே தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top