பொதுவாகவே புருஷர்கள் நித்யப்படி தலைக்குத் தீர்த்தமாட வேண்டும். அதுவும் பிதா இல்லாவிட்டால் கட்டாயமாகத் தீர்த்தாமாட வேண்டும். சிறு குழந்தைகள் அதாவது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வேத அத்யயனத்திற்குச் செல்லும் குழந்தைகள், இவர்களை எல்லாம் ப்ரஹ்மசாரியாக இருக்கும் பொழுது நித்தியம் தலைக்குத் தீர்த்தமாட வேண்டாம் என்று சொல்வார்கள். இது பொதுவானது. அம்மா பரமபதித்தது என்கின்ற நியமங்கள் எல்லாம் இதில் வராது.
அபயங்க ஸ்நானம், எண்ணெய் ஸ்நானம் சனிக்கிழமை விசேஷம். ஸ்த்ரீகளுக்கு வெள்ளிக்கிழமை விசேஷம். விரத நாட்களில், அமாவாஸ்யை, ஏகாதசி, பௌர்ணமி நாட்களில் எண்ணெய் ஸ்நானம் செய்யக் கூடாது. எண்ணெய் ஸ்நானத்தில் ஒரு முக்கியமான விஷயம், காலையில் சந்தியாவந்தனம் செய்த பிறகு எட்டு மணிக்கு மேல்தான் எண்ணெய் ஸ்நானம் பண்ண வேண்டும். அதற்கு முன் பண்ணக்கூடாது என்று இருக்கின்றது.