1. அடியேனுக்கு நான்கு/ஐந்து தலைமுறைக்கு முன்னான தஸராத்ர ஞாதியின் விவாகமான பெண் பரமபதித்தால் ஆஶௌசம் உண்டா? எவ்வளவு நாட்கள்? 2. உடன் பிறந்த ஒருவருக்கு ஆஶௌசம் என்று தெரிந்து அந்தச் சமயத்தில் அவர் ஒரு ப்ரார்த்தனைக்காக கல்யாண உற்சவம் செய்யப் போவதாக தெரிந்தாலும் அவருக்கு தெரிவிக்காமல் இருப்பது தர்மமா?

தஸராத்ர ஞாதியின் விவாகமான பெண் பரமபதித்தால் ஆஶௌசம் கிடையாது.
சில சந்தர்பங்களில் தேச-காலத்தை வைத்து தெரிவிக்காமல் இருப்பது நல்லது. ஒரு முக்கியமான ப்ரார்த்தனைக்காக செல்லுபோது நாம் சொல்லக்கூடாது, அவ்விடத்தில் இல்லாமல் நாம் ஒதுங்கிக்கொள்ளவேண்டும். அருகில் இருந்தால் சொல்லாமல் இருக்கக்கூடாது அதனால் ஒதுங்கிவிடுதல் நல்லது. தீட்டு என்பது தெரிந்தால்தான் தீட்டு, தெரியாவிட்டால் தீட்டு இல்லை. சொல்லவில்லை என்றால் தீட்டு வராது அக்காரணத்தால் சொல்லாமல் விலகிக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top