1) ஸமாஶ்ரயணம் (பஞ்ச சமஸ்காரம்) செய்து கொண்டவர்களைக் காட்டிலும் பரந்யாஸம் செய்து கொண்டவர்கள் வேறு ஏதாவது சில கர்மங்களை/நியதிகளைச் செய்ய அதிகாரி ஆகிறார்களா? வித்தியாசங்களை விளக்க வேண்டுகிறேன். 2) ஸ்ரீசூர்ணம் என்பது தாயாரைக் குறிக்க, அதன் நிறத்தில் வடகலை மற்றும் தென்கலை ஸம்பிரதாயத்தினருக்கு ஏன் வித்தியாசம் உள்ளது? வடகலை சம்பிராதாயதைச் சேர்ந்தவர்கள் சிலர் சிவப்பு நிறத்தில் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்கிறார்கள். இதில் தவறேதும் உள்ளதா? 3) ஆசமனம் செய்ய உத்தரணி பயன்படுத்தலாமா?

ஸமாஶ்ரயணம் என்பது பஞ்ச சம்ஸ்காரம். அதைச் செய்துக்கொண்டால்தான் வேறு சில கார்யங்கள் செய்ய யோக்யதை வரும். ஆனால் பரந்யாஸம் என்பது அப்படியில்லை. அதைச் செய்தால் தான் யோக்யதை என்பதெல்லாம் இல்லை. பரந்யாஸம் செய்தால்தான் மோக்ஷம், இல்லையென்றால் இல்லை என்பது மட்டும்தான்.
ஸ்ரீசூர்ணம் பற்றி சென்ற வெளியீடுகளில் நிறைய குறிப்பிட்டிருக்கிறோம் (ப்லவ-புரட்டாசி வெளியீட்டை இந்த linkல் சென்று பார்க்கவும்: https://sudarsanam.sampradayamanjari.org/sudarsanam-monthly-releases/) மஞ்சள்தான் சுத்தமானது சிவப்பு என்பது மஞ்சளில் இருந்து தயாரிக்கப்படுவது. அவ்வளவே வித்தியாசம்
ஆசமனம் செய்ய உத்தரணி பயன்படுத்தினால் அந்தப் பாத்திரத்தைக் கால் அருகே வைக்கவேண்டி வரும் அவ்வாறு செய்வது சரியில்லை. மனையில் அமர்ந்து செய்யமுடியாது. இடது கையில் பாத்திரம் வைத்துக்கொண்டு செய்வதென்பதுதான் நம் சம்ப்ரதாயம். அதனால் உத்தரணிக்கு ப்ரஸக்தியில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top