அந்தந்தப் பருவத்தில் ஏற்படும் காம க்ரோதாதிகளை எப்படிக் கட்டுப்படுத்துவது. உதாஹரணத்திற்கு: பிள்ளை பேறுகள் பெற்ற க்ருஹஸ்தர்களுக்கு அர்த்தத்தின் மீது அதிக காமம் இருக்கும், ப்ரஹ்மசாரிகளுக்கு ஏற்படும் ஆசை வேறு விதமாக இருக்கும். இப்படி பல்வேறுபட்ட காமங்களை அடக்குவது எப்படி?

அந்தந்தப் பருவத்திலே ஏற்படக்கூடிய காமக் க்ரோதங்களை ஜெயிக்க வைராக்ய பஞ்சகத்தைப் பாராயணம் செய்யலாம் என்று தோன்றுகிறது. வைராக்ய பஞ்சகம் என்பது ஒருவனுக்கு ஐஶ்வர்யம் க்யாதி இவற்றின் மேல் இருக்கக்கூடிய மோகத்தைப் போக்கும். ஸ்வாமி தேஶிகன் ஸ்தோத்ரம் எப்படி இதையெல்லாம் த்ருணமாக மதித்தார் என்று இந்த ஸ்தோத்ரம் சொல்லுகிறது அதனால் இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்தோமேயானால் நமக்கும் வைராக்யம் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top