நதிகளில் சங்கல்பம், ஸ்நானாங்க தர்ப்பணம் இவையெல்லாம் கிழக்குப் பார்த்துதான் பண்ணவேண்டும். நதி ப்ரவாகம் பார்த்து பண்ணவேண்டாம். ஸ்நானம் மட்டும்தான் ப்ரவாகம் பார்த்து பண்ணனும்.
கோயிலில் பெருமாள் இருக்கும் திசைப் பார்த்து அனுஷ்டானம் பண்ணலாம். அதில் அசௌகர்யம் இருந்தால் கிழக்கு, மேற்கு என்று அந்தந்த அனுஷ்டான சமயத்திற்கு ஏற்றவாரு ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டுள்ள திக்கை நோக்கிப் பண்ணலாம்.
மாத்யாஹ்நிகம் காலை செய்துவிட்டால் மறுபடியும் மத்தியானம் செய்யவேண்டாம்.
தர்ப்பண நாட்களில் பூசனி, பரங்கி பண்ணும் வழக்கமில்லை.

