அடியேனுக்கும் , என் பாரியாளுக்கும் சமீபத்தில் ஆசார்யன் திருவடியில் ஸமாஶ்ரயணமும், பரந்யாஸமும் ஆயிற்று. அடியேன் ஒரு பஜனை குழுமத்தில் கடந்த 6 வருடங்களாக பாடகராக இருக்கின்றேன். பல கோயில்களுக்குச் சென்று தாயார்,பெருமாள், சிவன்,பிள்ளையார், அம்பாள் என அனைவரையும் பற்றி பாடுவேன் இருப்பினும் தேவதாந்தரங்களிடம் ப்ரார்த்தனை ஏதும் செய்யமாட்டேன். பரந்யாஸம் ஆனபின் அதைத் தொடராலாமா?