1. நீங்களே மூன்றாவது கேள்வியில் குறிப்பிட்டுள்ளீர்கள் சங்க்ரஹமாகச் செய்யவேண்டும், 10 எண்ணிக்கை செய்யவேண்டும் என்பதெல்லாம் ஜனன, மரண என இரண்டு ஆஶௌச காலத்திலும்தான். மேலும், அங்கந்யாஸ கரந்யாஸங்கள் செய்யும் வழக்கமில்லை. ஜபம், ப்ராணாயாம மந்திரங்களை வாயால் சொல்லக்கூடாது, மனதில் சொல்லிக்கொள்ள வேண்டும் என்பவைதான் நியமம்.
2. தூர பிரயாணங்கள் போது மந்திரார்த்தமாக சந்தியாவந்தனம் செய்யலாம். இருப்பினும் மறுநாள் ஜலமுள்ள இடத்திற்குச் சென்றபின் முதல்நாளுடைய சந்தியாவந்தனமும் சேர்த்து பண்ணவேண்டும்.
3. ஜனன மரண ஆஶௌசத்திற்கு ஒரே மாதிரியான சந்தியாவந்தன நியமம்தான். குறிப்பு என்று எதைக் கேட்கிறீர்கள் என்பது புரியவில்லை.