திருப்புல்லாணி ஆதி ஜகன்னாதர் திவ்ய தேசம் சேதுக்கரையில் இருப்பதென்பதே அதன் சிறப்பாகும். ஸேது ஸ்நானம் என்பது ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே முக்கியமானது. தர்ம ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பல பாபங்களுக்கு ப்ராயஶ்சித்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஶ்ரீவைஷ்ணவர்களுக்குக் குறிப்பாக நம் எம்பெருமான் ஶ்ரீராமபிரான் எழுந்தருளியிருப்பதாலே கூடுதல் விசேஷமாகுகிறது.