பரமாத்மா என்பவன் சித் அசித் என எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக உள்ளான் என்று புரிகிறது. எம்பெருமான் எவ்வாறு அந்தர்யாமியாக ஏளியிருக்கிறான் என்பதில் வடகலை தென்கலை ஸம்ப்ரதாய பேதங்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். நம் பூர்வர்கள் அந்தர்யாமி எம்பெருமானை எப்படிச் சாதித்துள்ளார்கள் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

பரமாத்மா என்பவன் சித் அசித் என எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருக்கிறான் என்பதில் வடகலை தெங்கலை ஸம்ப்ரதாய பேதமில்லை. ஒரேயொரு சின்ன பேதம் மட்டும்தான், ஜீவாத்மாவிற்குள் எம்பெருமான் எப்படி எழுந்தருளியிருக்கிறான் என்பதில்தான். ஜீவாத்மா அணு அளவிலானது, மிகச்சிறியது. அதற்கு உள் பாகம் என்றொன்று கிடையாது. அவற்றுக்குள் எம்பெருமான் எப்படி ஏளியிருக்கிறான் என்ற கேள்விக்கு, நம் பூர்வர்கள் விளக்கியிருக்கிறார்கள் என்றால், ஜீவாத்மாவிற்குப் பரமாத்மாவுடன் சம்பந்தப்படாத பாகம் என்ற ஒன்று கிடையாது. உள் பாகம் என்றொன்று கிடையாது;வெளிபாகத்தில் எம்பெருமான் ஏளியிருக்கிறார். உள்ளே என்ற ஒரு அம்சமே இல்லாததால், ஜீவாத்மாவிற்குள்ளே பரமாத்மா கிடையாது என்று சொல்ல முடியாதென நம் பூர்வர்கள் விளக்கியிருக்கிறார்கள்.
மற்றபடி அனைத்து வஸ்துவிற்குள்ளும் எம்பெருமான் அந்தர்யாமியாக இருக்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top