பாகவதர்கள் என்றால் பகவானைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிறந்தவர்கள் பாகவதோத்தமர்கள். யாரை வேண்டுமானாலும் அவ்வாறு சொல்லிக்கொள்ளலாம். நல்ல கைங்கர்யபரர்கள், நல்ல ஆசாரத்தோடு இருப்பவர்கள், நல்ல ஞானமுடையவர்கள், பகவானிடத்தில் ப்ரதிபத்தியோடு இருப்பவர்கள், நல்ல பக்தி, நல்ல வைராக்யத்துடன் இருப்பவர்கள் என இவர்களில் யாரை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். நம் மனதில் இவர்களைப் பாகவதோத்தமர்கள் என்று, கொண்டாடலாம்.