அடியேனுக்கு, என் 2 வயது ப்ராயத்தில் பரந்யாஸம் ஸ்ரீமதழகிய சிங்கரால் பண்ணப்பட்டது என்பது சமீபத்தில்தான் அறிந்துகொண்டேன். அதன் பின்னரே நித்யானுசந்தானம், ஆசார்யன் தனியன் சேவிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுநாள் வரை பின்பற்றாததற்கு ஏதேனும் ப்ராயஶ்சித்தம் செய்யவேண்டுமா? மேலும் என் அகத்துக்காரர் பரகால மடத்தைச் சேர்ந்தவர்கள். அடியேனுக்கு இன்னும் ஸமாஶ்ரயணம் ஆகவில்லை. ஆன பின் ஸ்ரீஸந்நிதி மற்றும் பரகால மடம் என இரண்டு தனியங்களையும் அனுசந்திக்க வேண்டுமா?