அடியேன், பொதுவாக சிகப்பு மஞ்சள் என இரு வர்ண ஸ்ரீசூர்ணம் இருக்கிறது. இதில் புருஷர்கள் பரந்யாஸம் ஆன பின் சிகப்பு ஸ்ரீசூர்ணம் தரிக்கலாமா?

ஸ்ரீசூர்ணம் தரிப்பதற்கும் பரந்யாஸத்திற்கும் ஸம்பந்தமில்லை. மஞ்சள் (ஹரித்ரா) கலந்த ஸ்ரீ சூர்ணம் தரிப்பதே ஸ்ரேஷ்டம்(உயர்ந்தது). சிகப்பு தரிப்பதிலும் தோஷமில்லை.
குறிப்புகள்:
பொதுவாக ஹரித்ரா(மஞ்சள்) கலந்தது இட்டுக்கொள்ள வேண்டும் என உள்ளது.
மஞ்சள் ஸ்ரீ சூர்ணத்தினுடன் ஒரு கலவை கலப்பதால்தான் அது சிகப்பாகிறது.
ஆகையால் மஞ்சள் ஸ்ரீ சூர்ணம் தரிப்பது விசேஷம்.
ஸ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்கொள்ளலாமா?
திருமணுடன் ஸ்ரீ சூர்ணம் சேர்ந்து தரிப்பதே விசேஷம் அதுவே சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top