ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் வ்யாக்யானத்தில் ஸ்ரீ பராசர பட்டர் “ஏக பாத” என்ற ஶ்லோகத்திற்க்கு க்ருஷ்ணன் ஸ்ரீமந்நாராயணனின் பாதி அம்சம் என்கிறார். அதற்கு முந்தைய ஶ்லோகத்தில் நான்கு திருக்கைகளுடன் பர வாஸுதேவரே கண்ணனாக திருவவதாரம் செய்தார் என்கிறார். கீதையில் கண்ணன், தான் பரப்ரம்மம் என்பதையும் இந்த முழு உலகமும் தன் படைப்பு என்று கூறியதையும் வ்யாக்யானத்தில் சாதிக்கிறார். கண்ணன் யாரின் திருவவதாரம்?

கண்ணன் பரப்ரம்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய திருவவதாரம். அவர் பரவாசுதேவர்; மற்றும் அவரின் அவதாரம்தான்.
குறிப்புகள்:
அவதாரங்களைச் சொல்லும்போது ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் எல்லாம் பெருமாளுடைய அம்சம் என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் இருக்கின்றது.
அதற்கு வ்யாக்யானத்தில் அழகாக ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது, அதாவது அம்சம் என்றால் அவரின் எண்ணற்ற அம்சங்களில் ஒரு பகுதி மட்டுமே (ஒரு சக்தி தான்) வெளிப்படுகிறது எனும் அர்த்தமில்லை.
அவதாரத்தின் போது எம்பெருமான், சில சக்திகளை மட்டுமே ப்ரகாசப்படுத்துகிறார் (வெளிப்படுத்துகிறார்) அதைத்தான் அம்சம் என்கிறோமே தவிர மற்றபடி பெருமாள் எப்பொதும், தன் குணங்கள் மற்றும் சக்திகளுடன் பூரணத்துவமாக இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top