கண்ணன் பரப்ரம்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய திருவவதாரம். அவர் பரவாசுதேவர்; மற்றும் அவரின் அவதாரம்தான்.
குறிப்புகள்:
அவதாரங்களைச் சொல்லும்போது ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் எல்லாம் பெருமாளுடைய அம்சம் என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் இருக்கின்றது.
அதற்கு வ்யாக்யானத்தில் அழகாக ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது, அதாவது அம்சம் என்றால் அவரின் எண்ணற்ற அம்சங்களில் ஒரு பகுதி மட்டுமே (ஒரு சக்தி தான்) வெளிப்படுகிறது எனும் அர்த்தமில்லை.
அவதாரத்தின் போது எம்பெருமான், சில சக்திகளை மட்டுமே ப்ரகாசப்படுத்துகிறார் (வெளிப்படுத்துகிறார்) அதைத்தான் அம்சம் என்கிறோமே தவிர மற்றபடி பெருமாள் எப்பொதும், தன் குணங்கள் மற்றும் சக்திகளுடன் பூரணத்துவமாக இருக்கிறார்.