ப்ரபந்நனின் மீதமுள்ள புண்ணிய பாபத்தினை, விரஜை கடக்கும் முன் பெருமாள் வேறு சிலருக்குப் பிரித்துக் கொடுக்கிறார் என்கிறார்கள். அப்படியிருக்க அவரை அறியாமல் சேர்கின்ற அந்த பாபத்தினை எப்படிக் கழிப்பார்? அதே போல் நம் புண்ணியம், வேறு ஒரு சேதனனுக்குச் சேர்கிறது என்றால், அது அவர் பெருமாளிடம் சேரும் நாளைத் தாமதிக்குமா?

புண்ணியமோ பாபமோ யாரிடம் சேர்கிறதோ இரண்டையுமே அவரவர் அனுபவித்துதான் கழிக்க வேண்டும்.
குறிப்புகள்:
ஒரு ப்ரபந்நன் செய்த புண்ணிய பாப காரியங்கள் பின்னால் வேறு ஒருவருக்கு போய்ச் சேரும், அவரிடம் அபசாரப்பட்டவரிடம் அந்தப் பாபங்கள் போய்ச் சேரும், அவரிடம் அனுகூலமானவரிடம் அந்தப் புண்ணியங்கள் வந்து சேரும்.
இவை இரண்டையுமே அவரவர் அனுபவித்துதான் கழிக்க வேண்டும். ஒருகால் யாருக்குச் சேர்கிறதோ அவரும் ப்ரபந்நராக இருந்தால் நிர்திஷ்டமான காலம் அதாவது “एतत् देहावसाने” காலத்திற்குள்ளேயே அந்தப் பலனை அனுபவித்து விடுவார் இதனால் மோக்ஷத்திற்கு விளம்பம் வராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top