பகவத் அனுக்ரகத்தினால் மட்டுமே எக்காரியமும் செய்ய இயலும். அப்படியென்றால் நாம் செய்யும் தர்ம அதர்மாதிச் செயல்களுக்கு, பகவான் மறைமுகக் காரணமாக இருக்கின்றாரா? தெளியப்படுத்தவும் அடியேன்.

ஆமாம். கட்டாயம் பெருமாள்தான் காரணமாக இருக்கின்றார். பகவான் காரணமாக இல்லையென்றால் நம்மால் எந்த காரியமும் செய்ய முடியாது. பகவத் அனுக்ரஹத்தால் மட்டுமே எல்லாக் காரியங்களும் நடைபெறுகின்றன.
அவர் மறைமுகமான காரணமாக இருக்கிறார் என்பதுதான் சரி. ஏனென்றால் நேரடியாக நாம்தான் காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கிறோம். ஆனால் பகவான் இல்லையென்றால் நம்மால் அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது.
குறிப்புகள்:
உதாஹரணத்திற்கு, நமக்கு முன் ஒரு பெரிய பாறாங்கல் இருக்கின்றது. அதை நம்மால் தனியாக நகர்த்த முடியாது. மற்றொருவர் சகாயம் செய்தால்தான் அந்தக் கல்லை நகர்த்த முடியும். அதேபோல் பெருமாள் மறைமுகக் காரணமாக இருக்கின்றார்.
நாம் செய்யும் காரியங்களுக்கு அனுமந்தாவாக அதாவது அக்காரியங்களை அனுமதிப்பவனாகவும் மேன்மேலும் தொடரவும் பகவான் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top