நாம் காலை மற்றும் இரவு செய்யும் பாபங்கள் சாயம் மற்றும் காலை சந்தியாவந்தனத்தில் போகிறது. ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் உள்ள அபராத பரிஹாரம் என்னும் அதிகாரத்தில், ப்ராயச்சித்தமானது நாம் அறிந்து செய்த பாபங்களுக்கு என்று ஸ்வாமி சாதித்துள்ளார் அதன் தாத்பர்யம் யாது? தயை கூர்ந்து விளக்கவும்.

சந்தியாவந்தனத்தில் பாபங்கள் போக சில மந்திரங்கள் இருக்கின்றன. நாம் தெரியாமல் செய்த பாபங்கள் மட்டுமே அதில் போகும்.
தெரிந்தே செய்த பாபங்களுக்குக் கண்டிப்பாக ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும். அதுவே உசிதம்.
குறிப்புகள்:
சந்தியாவந்தனம் பண்ணுவது, ஒரு பெரிய பலனைக் கொடுக்காது என்றாலும் சந்தியாவந்தனம் பண்ணாதிருந்தால் பாபம் வரும் என்று பெரியவர்கள் கூறியிருக்கின்றனர்.
ஆக சந்தியாவந்தனம் செய்ய, நம்மை அறியாமல் செய்த பாபங்கள் போகலாமே தவிர, தெரிந்தே செய்த பாபங்களுக்கு ப்ராயச்சித்தம் செய்தாக ப்ராயச்சித்தம் செய்தாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top