ஆசாரம் என்றால் என்ன? அனுஷ்டானம் என்றால் என்ன? என்பதைத் தெளியப்படுத்த ப்ரார்திக்கின்றேன்.

அனுஷ்டானம் என்றால் வைதீக கர்மங்கள். அதாவது நாம் செய்யக்கூடிய ப்ரம்ம யக்ஞம், திருவாராதனம் முதலான கர்மங்கள்.
ஆசாரம் என்பது அனுஷ்டானம் செய்வதற்கு, வேண்டிய தகுதியைக் கொடுப்பது.
குறிப்புகள்:
சுத்தியுடன் தான் அனுஷ்டானம் பண்ண வேண்டும்.
அதாகப்பட்டது, ஒருவர் மிகவும் ஆசாரமாக திருவாராதனம் பண்ணுகின்றார் என்றால் அவர் நன்கு தீர்த்தமாடி விட்டும், யார் மேலே படாமலும் சந்தியாவந்தனம் பண்ணிவிட்டும், கைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டும் பண்ணுகின்றார் என்று அர்த்தம். இவையே ஆசாரமாகும்.
அனுஷ்டானத்திற்குத் தேவையான ஒரு சுத்தியைக் கொடுப்பதுதான் ஆசாரம்.
ஆசாரத்துடன் கூடிய அனுஷ்டானம் தான் விசேஷம்.
வெறும் ஆசாரமாக மட்டுமே இருப்பது ப்ரயோஜனம் கிடையாது (உபயோகமில்லை) என்று ஸ்ரீபாஷ்யக்காரர் சாதித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top