நமது அனுஷ்டானத்தை விஞ்ஞானத்துடன் எப்படி ஒப்பிடுவது. உதாஹரணத்திற்கு சாஸ்த்ரங்களின் படி, க்ரஹண காலத்தில் சாப்பிடக்கூடாது. இந்த முறை மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்று பல நடைமுறைப் பழக்கங்களைக் குழந்தைகளுக்கு விளக்க முடியவில்லை. இப்படி சரியான விளக்கம் தர முடியாததால் நம் ஸம்ப்ரதாயத்தில் இருந்து நம் குழந்தைகளை இழக்க நேரிடும். தந்யோஸ்மி

சாஸ்த்ரமே ப்ரதானம். சாஸ்த்ரத்தை, விஞ்ஞானம் கொண்டு புரிந்துகொள்ள முயற்சிக்கக் கூடாது. விஞ்ஞான ரீதியாக அதற்கு விளக்கம் தேட நினைக்கவே கூடாது.
ப்ரமாதாக்கள் செய்யக்கூடிய ஹிதமே சாஸ்த்ரம்.
குறிப்புகள்:
சாஸ்த்ரம் சொல்வதை முழுமையாக நம்புவதே சர்வோசிதம் அதையே குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும்.
விஞ்ஞானமே சாஸ்த்ரத்தில் இருந்துதான் வந்திருக்கிறது என்று நாம் உணர்ந்து கொண்டு அதை இக்காலக் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
உதாஹரணமாக, க்ரஹண காலத்தில் உணவருந்தக் கூடாது என்பதை சாஸ்த்ரம் மட்டுமல்லாமல் விஞ்ஞானமும் ஒத்துக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் புறவூதா கதிர்கள்(ultraviolet rays) மற்றும் காந்தப்புலம்(magnetic field) இவையெல்லாம் மிகவும் தீவிரமாக இருக்கின்றபடியால் நமது ஜீரண சக்தி பாதிக்கப்படும், ஆகையால் உணவு உட்கொள்ளக்கூடாது என்று விஞ்ஞானமும் கூறுகின்றது.
புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிற புஷ்பக விமானத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் ஆகாச விமானமே உருவானது என்பர். ஆகையால் எல்லாவற்றிற்குமே சாஸ்த்ரம்தான் அடிப்படை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top