ஆசார்யர்கள் அருளிய க்ரந்தங்கள் அதில் இருக்கக்கூடிய வசனங்கள் இவற்றிற்கு ஸ்ரீஸூக்தி என்று பெயர்.
உதாரணம் : தேசிகன் அருளிய ஸ்தோத்ர பாடங்கள், அதிலுள்ள வசனங்கள்
குறிப்புகள்:
பூர்வாசார்யர்கள் என்றால், இப்பொழுது இருக்கும் ஆசார்யர்கள் அல்லாது இதற்கு முன் இருந்த ஆசார்யர்களைக் குறிக்கின்றது.
அந்த ரீதியில் ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த க்ரந்தங்கள் அதிலுள்ள வசனங்கள் இவற்றிற்கெல்லாம் பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகள் என்று பெயர்.
உக்தி என்றால் வார்த்தை, ஸூக்தி என்றாள் நல்ல வார்த்தை. அதை ஆசார்யர்கள் அருளியபடியினால் ஸ்ரீஸூக்தி என்று சொல்லுகிறோம்.