ஸம்ப்ரதாயத்தின் முக்கியத்துவமும் அதன் அர்த்தமும் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கு வழியை தெளியப்படுத்தவும்.

ஸம்ப்ரதாயம் என்பது கொடுத்து வருவது, அதாவது ஆசார்யர் நமக்குக் கொடுத்து வரக்கூடிய மத சித்தாந்த கருத்துக்கள். நாமாக ஒன்றைக் கல்பித்து/கண்டுபிடித்துச் சொன்னால் அது ஸம்ப்ரதாயமாகாது.
குறிப்புகள்:
நம் ஆசார்யர்கள் நமக்குச் சொல்லும் தத்வம் ஹிதம் புருஷார்த்தம் வேதத்தின் அர்த்தங்கள் என்ற எதுவுமே இவர்களாகக் கண்டுபிடித்துச் சொல்லவில்லை அவரவர்களுடைய ஆசார்யர்கள் சொன்னதைச் சொல்கிறார்கள்; அவை ஸம்ப்ரதாயமாக இருக்கிறது.
நாதமுனிகள், பகவத் இராமனுஜர், ஸ்வாமி தேசிகன் என அனைவரும் அவரவர் ஆசார்யர் சொல்லியதைத்தான் சொல்லுகிறார்கள். இப்படியாக இவை மொத்தமும் ஸம்ப்ரதாயத்தில் வந்த்திருக்கிறது, அதாவது தானே எதுவுமே சொல்லாது, ஒருவர் சொல்லிக்கொடுத்துச் சொன்னதாக வந்திருக்கிறது.
வேதம், தர்ம சாஸ்த்ரம், போன்றவற்றின் அர்த்தம் மிகவும் குழப்பமாக இருக்கும். தானாக அறிய முயன்றால் குழப்பம் ஏற்படும், விபரீதமான அர்த்தம் தோன்றக்கூட வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஸம்ப்ரதாய வழியில் இதை அறிய வேண்டும். அதாவது முன் இருந்த மஹாஞானிகள் அவர்கள் என்ன ரீதியில் அர்த்தம் சொல்லியிருக்கிறார்களோ அதை அந்த ரீதியில், ஸம்ப்ரதாய வழியில் கற்றுப் புரிந்துகொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top