திருவஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் அர்தாநுஸந்தானமாக சொல்ல விசேஷம் என ஸ்வாமி தேசிகன் முதலிய ஆசார்யர்கள் சாதித்திருக்கிறார்கள்.
குறிப்புகள்:
அதனை ஆசார்யர்களிடமிருந்து, ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயம் முதலான காலக்ஷேபம் மூலமாக அர்த்தம் என்ன என்றுத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அர்தாநுஸந்தானம் செய்ய ஏற்றதாகத் திருவஷ்டாக்ஷரச் சுருக்கு, த்வயச் சுருக்கு, சரம ஸ்லோக சுருக்கு என மூன்று ப்ரபந்தம் ஸ்வாமி தேசிகன் அருளியிருக்கிறார். அதே போல் அஷ்டஶ்லோகி என்று ஸ்ரீ ப்ராசர பட்டர் சாதித்திருக்கிறார்.
இப்படி ஆங்காங்கே அர்தாநுஸந்தானம் செய்ய ஆசார்யர்கள் அருளியிருக்கின்றனர், ஆனால் அதற்கு முன் காலக்ஷேபம் மூலம் தெரிந்துக் கொள்வது நலம்.