நமது ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில், நித்ய கர்மானுஷ்டானம் என்பது யாது? எவையெல்லாம் நித்ய கர்மானுஷ்டானம் என்று தெரியப்படுத்த ப்ரார்த்திக்கிறேன்.

தினமும் காலை எழுவது முதல் இரவு படுத்துக்கொள்வது வரை, தினமும் செய்ய வேண்டிய சந்தியாவந்தனம் முதலியவை நித்ய கர்மானுஷ்டானங்கள். இவற்றைப் பற்றி ஆஹ்நிக நூல்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
குறிப்புகள்
ஒரு நாளில் செய்ய வேண்டியதாகச் சொல்லப்பட்ட கர்மாக்கள் சுருக்கமாக:
விடியற்காலையில் ஹரி ஹரி என்று, ஹரி சிந்தனையுடனே எழுந்து, தேகசுத்தி, சரீரசுத்தி (ஸ்நானம்) செய்துவிட்டு, ஊர்த்வபுண்ட்ரங்கள் தரித்துக்கொண்டு சந்தியாவந்தனாதி கர்மாக்கள் செய்வது,
மேலும் உபநயனம் ஆன ப்ரம்மச்சாரியாக இருந்தால் ஸமிதாதானம், விவாஹிதராக இருந்தால் ஔபாசனம், அதேபோல் தேவரிஷி, காண்ட ரிஷி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். உபதேசம் ஆகியிருந்தால் ஆதாரசக்தி தர்பணம், பிரம்மயக்ஞம் , மாத்யானிகம், நித்யாராதனம், பின்பு அனுயாகம் (பகவத் ப்ரசாதத்தை ஸ்வீகரித்தல்) போன்றவையும்,
ஸ்வாத்யாய காலத்தில் பகவத் சிந்தனையுள்ள புத்தகங்களை வாசிப்பது. பகவானுடைய திருவாராதன கைங்கர்யத்திற்குத் தேவையான பொருட்களை ஈட்டுவது பகவத் சிந்தனையுடன் உறங்குவது இவை அனைத்துமே நித்யகர்மானுஷ்டானங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top