அடியேன், எனது தந்தை கொரோனாவால் பரம்பதித்தபடியாலும், அதே சமயம் அடியேனும் அந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதனால் எந்த ஈமக்ரியைகளும் என்னால் செய்ய இயலவில்லை.எனது மூத்த சகோதரன் 13 நாள் காரியம் வரை அனைத்தும் செய்தார். சுமார் ஒரு மாதம் கழித்து ஆத்து வாத்யாரின் வழிகாட்டுதலின் படி, 10 நாள் தர்ப்பணம் மட்டுமே செய்தேன். தந்தையின் அந்திம காரியம் செய்ய முடியாமல் போனது வருத்தமளிக்கிறது, இதற்கு ஏதேனும் ப்ராயச்சித்தம் உண்டா?

பெரிய தமையனார் எல்லாம் செய்திருக்கிறார். அதற்குப் பிறகு ஆத்து வாத்தியாரின் வழிகாட்டுதல்படி செய்யவேண்டிய எல்லாக் கர்மாக்களையும் செய்தாகிவிட்டது. இதற்கு மேல் எந்த ஒரு ப்ராயச்சித்தமும் செய்யத் தேவையில்லை.
குறிப்புகள்
நம்மால் செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தியதே ஒரு ப்ராயச்சித்தம் தான். இளைய சகோதரராக இருக்கும் பக்ஷத்தில் உதகதானம் மட்டுமே செய்ய வேண்டும். அதுவும் செய்தாகிவிட்டபடியால் இனிச்செய்வதற்கு ஒன்றுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top