ஶ்ராத்தத்திற்கு மறுநாள், அதற்கு அங்கமாக ஒரு தர்ப்பணம் செய்ய வேண்டும், அதற்குப் பெயர் பரேஹனி தர்ப்பணம்.
பரே அஹனி என்றால் அடுத்த நாளில் என்று அர்த்தம். அமாவாஸையாதிகள் தர்ப்பணத்திற்குச் செய்யும் அதே சுத்தியுடன் செய்ய வேண்டும்.
குறிப்புகள்
மறுநாள் சூர்யோதயம் முன் செய்யக்கூடாது. ஸ்நானம் செய்து திருமண் இட்டுக்கொண்டு சூர்யோதயம் சமயம் சந்தியாவந்தனம் செய்த பின்புதான் பரேஹனி தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அன்று இரவு வ்ரதம் இருக்க வேண்டும் சாதம் சாப்பிடக்கூடாது, இயலாதவர்கள் பலகாரம் செய்யலாம். பரேஹனி தர்ப்பணத்திற்கு வேறு தனிப்பட்ட நியமம் எதுவுமில்லை.