ராமானுஜாய நம: அடியேன். அடைக்கலம் நான் புகுந்தேனே என்பதையும் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே என்பதையும் எப்படிப் புரிந்து கொள்வது ஸ்வாமி. நீயே கதி வேறு புகல் இல்லை என்றும் ப்ரத்யக்ஷமாய் கச்சியிலும் திருமலையிலும் பெருமாள் சேவை சாதிக்கிறார் என புரிந்து கொள்வது சரியா? தந்யவாதங்கள் ஸ்வாமி 🙏🙏🙇‍♀️🙇‍♀️அடியேன்.

“அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே”, “அடைக்கலம் நான் புகுந்தேனே” – இவ்வரிகள் குறிப்பது யாதெனில்: எம்பெருமானே ஶரண்யன், அந்த ஶரண்யனை வேறு புகல் இல்லாமல் அகிஞ்சனனாக நான் சரண் புகுந்தேன்.

குறிப்புகள்:

மேலும் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே: அந்தத் திருமலையப்பனிடம் நம்மாழ்வாரும், அடைக்கலம் நான் புகுந்தேனே : என்று வேழமலையில் இருக்கும் தேவாதிராஜனிடம் ஸ்வாமி தேசிகனும் ஶரணாகதி செய்கின்றனர் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top